வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 21 ஏப்ரல் 2021 (12:39 IST)

மோசமாகும் கொரோனா நிலைமை; இந்தியா வர அஞ்சும் வெளிநாட்டு தலைவர்கள்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தனது இந்திய பயணத்தை ரத்து செய்வதாக ஜப்பான் பிரதமர் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும் இந்தியாவில் கொரோனா வேகமாக அதிகரித்து வருவதும் இந்தியாவின் இரட்டிப்படைந்த கொரோனா தொற்று மற்ற நாடுகளில் கண்டறியப்படுவதும் உலக நாடுகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருமுறை ரத்தான நிலையில் சமீபத்தில் மூன்றாவது முறையாக மீண்டும் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இந்தியா வர இருந்த ஜப்பான் பிரதமர் சுகாவும் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.