1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 23 ஜூலை 2017 (18:55 IST)

பறக்கும் விமானத்தில் முன் சீட்டில் காலை போட்டு ஜன்னலை திறந்துவிட்ட பெண்

பறக்கும் விமானத்தில் பெண் பயணி ஒருவர் முன் சீட்டில் காலை தூக்கிப் போட்டு ஜன்னலை திறந்து விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கலிபோர்னியாவில் இருந்து சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்ற விமானத்தில் கெஸ்சி சார் என்ற பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். விமானத்தில் பயணம் செய்யும் போது அவர் அமர்ந்திருந்தத இருக்கைக்கு முன் இருக்கை காலியாக இருந்ததால் அந்த சீட்டில் காலை தூக்கி போட்டு அமர்ந்துள்ளார். 
 
இதை அவர் புகைப்படம் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது அவரது பதிவு வைரலாக பரவி வருகிறது. மேலும் அவர் விமனத்தின் ஜன்னலை திறந்ததையும் குறித்து பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவை இதுவரை 29,000 பேர் லைக் செய்துள்ளனர்.