1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2023 (19:45 IST)

ரூ.9 லட்சம் கோடிக்கு சொந்தக்காரர் ரோட்டுக் கடையில் சாப்பிடுவது ஏன்?

waran puppet
இந்த உலகில் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த வாரன் பஃபெட். உலகின் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

இவர் ஏற்கனவே  தன் சொத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக அளிக்க உறுதி வழங்கியுள்ளார்.

தற்போது ரூ.9 லட்சம் கோடிக்கு (11,710 அகோடி அமெரிக்க டாலர்)  சொந்தக்காரராக இருக்கும் வாரன் பஃபெட் தன் இளமைக் காலத்தில் சிக்கனமாகவும், எளிமையாக வாழ்க்கையை தொடங்கியது போன்று தற்போதும் அதே எளிமையை தொடர்கிறார்.

அதன்படி, மற்ற உலகக் பணக்காரர்களைப் போன்று இவர் விதவிதமான உணவு சாப்பிட்ட அதிக செலவுகளை செய்வதில்லை,  மாறாக அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் வேகவைத்த இறைச்சி, முட்டை, சீஸ்  பிஸ்கர் மற்றும் சாண்ட்விச் என 4 டாலரில் காலை உணவை  அவர் விரும்பிச் சாப்பிடுவதாக தகவல் வெளியாகிறது.