1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 15 நவம்பர் 2019 (19:36 IST)

ஆற்றில் பதுங்கி வந்த ‘புலி... நொடியில் உயிர் தப்பிய ’வாத்து ’...திரில்லிங் வீடியோ

உலகில் பிறந்த எல்லா வகையான உயிர்களுக்குமே உயிர்வாழ எப்படி ஒரு சூழல் உள்ளதோ அதேபோல், வயிற்றுப் பசியைப் போக்கவும் பல்வேறு நிலைகள் உள்ளன. அப்படி வயிற்றை  நிறைத்து வாழ்வதில் தான் அன்றாடமும் விலங்குகள் வேட்டையாடுவற்கும், பறவைகள் இரை தேடிப் பறக்கவும் காரணமாகிறது. 
இந்நிலையில், டுவிட்டரில் ஒரு வீடியோ ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஆற்றில் குதித்த புலி ஒன்று மெதுவாக நீரில் நகர்ந்து வந்து, அங்கு நீந்திக்கொண்டிருக்கும் வாத்தப் பிடிக்க அருகில் நெருங்கும் போது, அந்த வாத்து சாதுர்யமாக நீருக்குள் மூழ்கி, பின் இடப்புறமாக வெளியே வந்து தப்பித்து விடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.