1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 17 ஜூலை 2020 (07:13 IST)

அமெரிக்கா, பிரேசில், இந்தியா: ஒரே நாளில் மிக அதிக கொரோனா பாதிப்பு

அமெரிக்கா, பிரேசில், இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் நேற்று ஒரே நாளில் மிக அதிக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
 
அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 67,406 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும், இதனையடுத்து அந்நாட்டின் மொத்த பாதிப்பு 3,694,948 என்பதும், அந்நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 141,117 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அதேபோல் பிரேசிலில் ஒரே நாளில் 43,829 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர் என்பதும், இதனால் அந்நாட்டின் மொத்த பாதிப்பு 2,014,738 என்பதும், அந்நாட்டின் மொத்த பலி எண்ணிக்கை 76,822 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
அமெரிக்கா, பிரேசிலை அடுத்து இந்தியாவில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 35,468 பேர் பாதிப்பு என்பதும் இதனால் இந்தியாவின் மொத்த பாதிப்பு 1,005,637 என்பதும், இந்தியாவின் மொத்த பலி எண்ணிக்கை 25,609 என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
மேலும் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 1,39,30,155 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், கொரோனா தொற்றால் உலகில் இதுவரை 591,865 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும், உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து இதுவரை 8,265,570 பேர் குணமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது