1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (22:12 IST)

தேர்தல் முடிவை விமர்சித்த டிரம்பை எச்சரித்த டுவிட்டர் நிறுவனம் !

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப் பதிவுகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஜனநயாகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார்.

ஆனால் தன் தோல்வியை டிரம்ப் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை இதை எதிர்த்து கோர்ட்டுக்குச் செல்லுவதாக கூறி வருகிறார்.

இந்நிலையில், ஜோ பிடன் டிரம்புக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருவதால் விரைவில் ஓட்டு எண்ணிக்கை இழுபறி தீர்ந்து, அதிபர் என்ற முடிவைக் காண உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளது.

அமெரிக்கா தேர்தலில் தேர்தல் முறைகேடு, வாக்கு எண்ணிக்கை நிறுத்த வேண்டுமென டிரம்ப் தொடர்ச்சியாக டுவீட் பதிவுட்டு வருவதால் டுவிட்டர் நிறுவனம் இதுபோல் கருத்துகளைப் பதிவிட வேண்டாம் என டிரம்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுதியுள்ளது.