திங்கள், 2 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (11:04 IST)

துருக்கி பல்கலைகழகத்தில் துப்பாக்கிச் சூடு- மாணவனின் வெறிச்செயலுக்கு 4 பேர் பலி

துருக்கி பல்கலைகழகத்தில் துப்பாக்கிச் சூடு- மாணவனின் வெறிச்செயலுக்கு 4 பேர் பலி
துருக்கியில் உள்ள ஒஸ்மான்காசி பல்லகலைகழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் நேற்று, அவர் மறைத்து வைத்திருந்த தூப்பாக்கியை எடுத்து திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி வெறித்தனமாக சுட்டுள்ளார்.
துருக்கி பல்கலைகழகத்தில் துப்பாக்கிச் சூடு- மாணவனின் வெறிச்செயலுக்கு 4 பேர் பலி
 
இதனால் அந்த பல்கலைகழக ஆசிரியர்கள், பணியாளர்கள் என நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 
இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அந்த மாணவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.