1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (15:38 IST)

அடுத்த 3மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 25 மாவட்டங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் தெரிவித்துள்ளது.
 
 தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, திருப்பத்தூர், தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, கோவை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
Edited by Siva