வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (23:08 IST)

ஷரியா சட்டத்தினால் பெண்களுக்கு உரிமை- தாலிபான்கள்

ஆப்கானிஸ்தான் நாடு தற்போது தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அந்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிநாட்டவர் உடனடியாக வெளியேறி வருகின்றனர். குறிப்பாக இந்தியர்கள், அமெரிக்கர்கள் ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறி உள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபரின் மாளிகையைப் பிடித்த தலிபான்கள் அங்கு ஆட்டம் போட்டனர், அதேபோல் குழந்தைகளைபோல் சிறுவகை கார்களை போட்டு கையில் துப்பாக்கியுடன் வீடியோ வெளியிட்டு இன்று உலகையே அதிர வைத்தனர்.

ஏற்னவே சீனா, பாகிஸ்தான் நாடுகள் தலிபான்களுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், தலிபான்களின் பழமைவாதம் பற்றிய பேச்சுகள் உலகம் முழுவதும் எதிரொளிக்கிறது.

இந்நிலையில்  அஷ்ராப் கானி ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் ஓமன் நாட்டிற்குத் தப்பி ஓடியுள்ளதாக தகவல் வெளியானது.

உலகமே ஆப்கானிஸ்தானை உற்றுநோக்கியுள்ள நிலையில், தற்போது அந்நாட்டின் துணை அதிபர் அம்ருல்லா சாலே தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், அதிபர் நாட்டை விட்டு ஓடிவிட்டதால், சட்டப்படி நானே அதிபர் என அம்ருல்லா சாலே தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாகவும், அவர்கள் வந்து பணி செய்யலாம் என தலிபான்கள் கூறியது குறிப்பிடத்தகக்து.

இந்நிலையில், தால்பான் செய்தித் தொடர்பாளர் ஹபிஹூல்லா முஜாஹித் தற்போது செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியுள்ளதாவது:

ராணுவத்திற்கும் தாலிபான்களுக்குமான சண்டை முடிந்தது. இதில் மக்களுக்கு இழப்பு உண்டாது ஒரு விபத்து. இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எல்லோருக்கும்பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்கள், ராணுவவீரர்கள், வெளிநாட்டுப் படைவீரர்கள் என யாரையும் தாலிபான் அரசு பழிவாங்காது. இனிமேல் அவர்களின் வீடுகளைச் சோதனையிட போவதில்லை எனத் தெரிவித்துல்ள்ளார்.

மேலும் அனைத்து ஊடகங்களும், பத்திரிகைகளும் நடுநிலையுடன் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஷரியா  சட்டத்தினால் பெண்களுக்கு உரிமை கிடைக்கும் அவர்களுக்கு எதிரான வேற்றுமைகள் நடக்காது எனவும் பெண்கள் மருத்துவத்துறையில் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.