1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 மார்ச் 2021 (21:41 IST)

குழந்தைகளைக் காப்பாற்ற போலீஸார் காலில் விழுந்த கன்னியாஸ்திரி

மியான்மரில் ஜனநாயக அரசைக் கலைத்து ராணுவ ஆட்சி தங்கல் கட்டுப்பாட்டிற்கும் நாட்டைக் கொண்டுவந்துள்ளது.

இதற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். அந்நாட்டு தலைவர் ஆங் சாங் சூகி தற்போது வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மியான்மர் நாட்டிலுள்ள ஒரு குடிசைப்பகுதியில் போலிஸார் தாக்குதல் நடத்த வந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கன்னியாஸ்திரி குழந்தைகளை அடிக்க வேண்டாம் என அவரகளில் காலில் விழுந்தார். இதனை எதிர்பார்க்காத போலீஸார் பதிலுக்கு அவரது காலில் விழுந்தனர்.

இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்தது.