செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 30 ஜூன் 2019 (13:27 IST)

மரணத்தைத் தொட்டு மீண்டவர்களின் ..சிலிர்க்கவைக்கும் அனுபவம் ! வைரல் தகவல்

அபாயகரமான விபத்து , தற்கொலை முயற்சி போன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கேட்டால் அவர்களின் தாங்கள் விபத்தை சந்தித்த  போது ஏற்பட்ட அனுபவத்தை விம்மலுடன் தெரிவிப்பார்கள். அந்த உக்கிரமான தருணத்தில் எப்படி மரணத்தைத் தொட்டுத் திரும்பினார்கள் என்பதைப் பற்றியும் சிலிர்த்துக்கொண்டு அந்த அதிசயமான அனுபவத்தைச் சொல்லுவார்கள்.
இந்நிலையில், டென்மார்க், ஜெர்மனி, நார்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு பல்வேறு  நாடுகளுக்கு பயணித்து பல மனிதர்களைச் சந்தித்தனர். மேற்கூறிய அனுபவம் கொண்டவர்களிடம் ஆய்வு நடத்தினர். அதில் கிடைத்த தகவல்களை  அவர்கள் ஐரோப்பிய அகாடமி ஆப் நியூராலஜி என்ற காங்கிரஸ் மாநாட்டில் அளித்தனர்.
 
அந்த ஆய்வு தவல்களின் படி : பல மனிதர்களுக்கு பலவிதமான அனுபவங்கள் ஏற்பட்டதை உணந்ததாகக் கூறியுள்ளனர்.சிலர் காலத்தை மாறுதலாக உணர்ந்ததாகவும், வேறு சிலர் வேகமாக துடிப்பான சிந்தனை இருந்ததாகவும் கூறியுள்ளனர். தற்போது இந்தத் தகவல் வைரல் ஆகிவருகிறது.