உலகம் தோன்றிய நாள் முதல் இன்று வரை எத்தனை எத்தனையோ மாற்றங்களை மனிதகுலம் சந்தித்து விட்டது. கற்காலம் தொடங்கி கம்ப்யூட்டர் காலம் வரை என்று நாம் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். கற்றது கைமண் அளவு என்றாலும் அந்த கை மண்ணையும் கலைநயத்தோடும் விஞ்ஞான அறிவோடும் கையாளத் தெரிந்தவன் மனிதன் என்பதால்தான் கம்பியூட்டர் காலத்தையும் தாண்டி செயற்கை நுண்ணறிவு எனும் புதிய பரிணாமத்திற்குள் அறிவை செலுத்தி உலகை தன் வசப்படுத்தி வருகிறான் மனிதன். ...