1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 20 மார்ச் 2022 (09:07 IST)

தைவான் எல்லைக்குள் பறக்கும் சீன விமானங்கள்! – தைவான் கண்டனம்!

தைவான் எல்லைக்குள் அத்துமீறி சீன விமானங்கள் தொடர்ந்து பறந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாட்டு எல்லைக்குள் சீன போர் விமானங்கள் கடந்த சில மாதங்களாகவே அதிக அளவில் அத்துமீறி நுழைந்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதத்தில் 39 சீன விமானங்கள் ஊடுறுவியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது தைவான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தைவானின் வான் எல்லைக்குள் சீனாவின் இரண்டு போர் விமானங்களும், இரண்டு குண்டு வீச்சு விமானங்களும் நேற்று நுழைந்ததாக கூறப்பட்டுள்ளது. சீனாவின் தொடரும் இந்த வான்வெளி அத்துமீறலுக்கு தைவான் கண்டனம் தெரிவித்துள்ளது.