தொடர்புடைய செய்திகள்
- உலகின் பிரபலமான பெண் மலாலா: கௌரவித்தது ஐ.நா!
- 100 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்! – கட்டிடத்தில் மோதி சிதறி விபத்து!
- நார்வே நாட்டு இளவரசியின் கணவர் தற்கொலை! – சோகத்தில் நார்வே!
- ஆசிய லெவன் vs உலக லெவன் – பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் விளையாடுவார்களா ?
- குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு; அமெரிக்காவில் பேரணி நடத்திய இந்தியர்கள்
சோமாலியாவில் கார் குண்டு வெடிப்பு – 73 பேர் பலி!
சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 73 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் அரசுக்கு எதிராக அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு தொடர்ந்து நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. சமீப காலங்களில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சோமாலியா தலைநகர் மோகதிஷூவின் அருகே உள்ள அரசின் வரி அலுவலகம் அருகே காரில் இருந்த குண்டு வெடித்ததில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.
அடுத்த கட்டுரையில்
