வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 30 ஜூலை 2016 (18:31 IST)

அழகு கலை நிபுணர் பெண் கௌரவ கொலை! - பாகிஸ்தானில் மீண்டும் அதிர்ச்சி

பாகிஸ்தானைச் சேர்ந்த அழகு சிகிச்சை நிபுணரை, அவரது தந்தை மற்றும் அப்பெண்ணின் கணவர் ஆகிய இருவரும் சேர்ந்து கௌரவ கொலை செய்ததை அடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

 
இங்கிலாந்தில் அழகு கலை நிபுணராக பணிபுரிந்து வருபவர் சாமியா சாஹித் (28). இவரது பூர்வீகம் பாகிஸ்தான் ஆகும். இவர் ஏற்கனவே தனது உறவினரான மொஹமது ஷக்கீல் என்பவரை திருமணம் செய்து அவரை விட்டு பிரிந்துவிட்டார்.
 
இதனை அடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு காஸம் (30) என்பவரை இரண்டாவது திருமணம் செய்த கொண்டு இங்கிலாந்தில் வசித்து வந்துள்ளார்.
 
இந்நிலையில், கடந்த புதன்கிழமை பாகிஸ்தானில் வசித்து வரும் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், அவரை பார்ப்பதற்காக அங்கு சென்றுள்ளார்.
 
திடீரென்று சாமியா மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக அவரது இரண்டாவது கணவருக்கு சாமியாவின் பெற்றோர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் அவளது உடலையும் அடக்கம் செய்துள்ளனர்.
 

 
ஆனால், காஸம் தனது மனைவியின் மரணம் இயற்கையான மரணம் அடையவில்லை என்றும், சாமியாவை அவரது குடும்பத்தினரே கௌரவக்கொலை செய்துள்ளனர் என்று காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
 
இதற்கான காரணத்தை கூறியுள்ள காஸம், ”எங்களது திருமணத்தை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, எப்படியாவது அவர்களது மகள் என்னைவிட்டு பிரிந்து, தங்களிடம் வந்துவிடுவாள் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர், ஆனால் இது நடக்கவில்லை, இதனால் கோபம்கொண்ட அவர்கள் அவளை கௌரவ கொலை செய்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.
 
இதனால், மீண்டும் பிரேத பரிசோதனை சாமியாவை உட்படுத்திய போது, அவரது கழுத்தில் 7.2 இன்ச் அளவுக்கு காயம் இருந்துள்ளது, அதுமட்டுமின்றி அவரது வாய் மற்றும் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது தெரியவந்துள்ளது.
 
இந்த விசாரணையில், உடற்கூறு பரிசோதனையில் சாமியா தாக்கப்பட்டதற்கான ஆதாரம் தெளிவாக தெரிய வந்ததை அடுத்து, சாமியாவின் தந்தை மற்றும் அவரது முதல் கணவரை காவல் துறையினர் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.