1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 21 மார்ச் 2022 (12:06 IST)

புதின் புதிய அறிவிப்பு: அணு ஆயுத போராக மாறுமா என அச்சம்?

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் 25 நாட்களாக நீடித்து வரும் நிலையில் இந்த போரை உடனடியாக முடிக்க அணு ஆயுதத்தை ரஷ்யா பயன்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
ரஷ்ய அதிபர் புதின் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பால் இந்த போர் அணு ஆயுதப் போராக மாறும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
 
ராணுவ கமாண்டர்கள் அணு ஆயுதங்களை விமானத்தில் கொண்டு செல்லும் பயிற்சியை மேற்கொள்ளுமாறு புதின் உத்தரவிட்டுள்ளார் இது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது
 
உக்ரைன் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா, அணு ஆயுதத்தை பயன்படுத்தும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது