ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (12:49 IST)

உக்ரைனில் தற்காலிகமாக போர் நிறுத்தம்… ரஷ்யா அறிவிப்பு!

உக்ரைனில் 9 நாட்களாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இப்போது தற்காலிகமாக போரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றியுள்ளதாக கூறியுள்ளது. ஆனால் உக்ரைன் ராணுவம் ரஷ்ய வீரர்களை எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை என்று உக்ரைன் கூறி வருகிறது. தொடர்ந்து  9 நாட்களாக நடந்துவரும் இந்த தாக்குதலில் உக்ரைன் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடையையும் விதித்துள்ளன.

இந்நிலையில் இப்போது ரஷ்யா உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.