1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (11:04 IST)

தடைக்கு மேல் தடை வாங்கும் ரஷ்யா..! – சீனா, வடகொரியா சாதனையை முறியடித்தது!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உலகிலேயே அதிகமான தடை வாங்கிய நாடாகவும் ரஷ்யா மாறியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் பல கண்டனம் தெரிவித்துள்ளதோடு ரஷ்யா மீது பொருளாதார தடை உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்து வருகின்றன.

முன்னதாக சீனா, வட கொரியா போன்ற நாடுகள் மீது உலக நாடுகளின் கட்டுப்பாடுகளை மீறியதாக பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. ஆனால் தற்போது ரஷ்யா மற்ற நாடுகளை விட அதிகமான தடைகளை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்வதேச நாடுகளிடம் அதிகமான தடையை பெற்ற நாடுகளில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளதாக வணிக, தூதரக ரீதியிலான தடைகளை கவனிக்கும் கேஸ்டல்லம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.