ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 29 அக்டோபர் 2017 (11:59 IST)

சுற்றுலா பயணியை கூட்டு பலாத்காரம் செய்த அகதிகள்: ஸ்பெனில் அதிர்ச்சி!!

ஸ்பெனில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் பெண் அகதிகள் சிலர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பாதிக்கப்பட்ட பெண் சுற்றுலா பயணி தன்னை ஒருவர் வணிக வளாகத்தில் உள்ள கழிவறை மறைவில் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.
 
அந்த புகாரின் பெயரில் விசாரனை மேற்கொண்ட போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. அதாவது, அங்கிருந்த சிசிடிவி கேமராவை சோதனை செய்ததில் அந்த பெண்னை 5 பேர் பலாத்லரம் செய்தது தெரியவந்துள்ளது.
 
அந்த பெண் போதையில் இருந்தால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பலாத்காரம் செய்த 5 பேர் சட்டவிரோதமாக ஸ்பெனில் தங்கி இருப்பவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். ஐந்தாம் நபரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.
 
மேலும், குற்றவாளிகள் மொராக்கோ நாட்டை சேர்ந்தவர்கள் என்ற தகவலை மட்டும் வெளியிட்டுள்ளனர்.