1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 8 டிசம்பர் 2022 (22:06 IST)

ஆஃப்கானிஸ்தானில் குற்றவாளிக்கு பொதுவெளியில் தூக்கு!

ஆப்கானிஸ்தானில் ஒரு குற்றவாளிக்கு  பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறின.

இதையடுத்து, தாலிபான் களின் கையில்   நாடு வந்தது முதல், பெண்கள் வேலைக்குச் செல்லக்கூடாது, பூங்காவுக்கு செல்லக்கூடாது  உள்ளிட்ட  பல்வேறு  கட்டுப்பாடுகள், நடவடிக்கைகள் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கொலை குற்றவாளியான ஒருவருக்கு பொது இடத்தில்  தூக்குதண்டைனை கொடுக்கப்பட்டது.

எனவே, 90 களில் தாலிபான் கள் ஆட்சியில் இருந்த அதே கொடூர தண்டனைகள்  நடைமுறைக்கு வந்துள்ளதால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Edited By Sinoj