வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 6 ஜூன் 2019 (15:13 IST)

காண்டம் வாங்க கூட காசு பத்தாது: கண்ணீர் சிந்தும் பாலியல் தொழிலாளி!

மேற்கு ஆப்ரிக்க நாடான சியரா லியோனில் சுமார் 3,00,000 பெண்கள் பாலியல் தொழில் செய்கிறார்கள். அவர்களில் ஒருவரின் கதைதான் இது. 
 
சியரா லியோனில் சுமார் 3,00,000 பெண்கள் பாலியல் தொழில் செய்கிறார்கள். 18 வயதான ஃபட்மடா கனு, பாலியல் தொழிலாளியாக  இருக்கும் தனது வாழ்க்கை பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது,
 
பாலியல் உறவு தேவைப்படும் ஆண்கள், என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள். ஒரு நாள் முழுக்க என்னுடன் உறவு வைத்துக்கொண்டு, ரூ.40 மட்டுமே கொடுப்பார்கள்.
 
ஒரு நாள் எனக்கு பாலியல் உறவு வைத்துக்கொள்ள தெருக்களில் ஆண்கள் கிடைக்கவில்லை என்றால் அன்று நான் பட்டினி கிடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 
மேலும், ஓர் இரவில் ஏழு முதல் எட்டு ஆண்களுடன் உடலுறவு மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். எனது உடலுக்கான ரூ.391. ஒரு ஆணுறை வாங்க சுமார் ரூ.196 செலவு செய்ய வேண்டியுள்ளது. 
 
எனக்கு இரு தங்கைகள் இருக்கிறார்கள். நான் இது போன்று வெளியே சென்று சம்பாதித்து வந்து அவர்களை படிக்க வைக்கிறேன். அவர்களுக்கு பள்ளிக் கட்டணம் செலுத்துகிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.