1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (10:23 IST)

வாடிகனில் போப்பாண்டவரை சந்திக்கின்றார் பிரதமர் மோடி!

வாடிகனில் போப்பாண்டவரை சந்திக்கின்றார் பிரதமர் மோடி!
அக்டோபர் 30-ஆம் தேதி வாடிகன் நகரில் போப் ஆண்டவரை பிரதமர் மோடி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
 
இத்தாலி தலைநகர் ரோமில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இத்தாலி செல்லும் பிரதமர் மோடி வரும் 30ஆம் தேதி வாடிகன் நகர் சென்று போப் ஆண்டவரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்திய பிரதமர் மோடி மற்றும் போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஆகியோர்களின் இந்த சந்திப்பு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது இந்தியா இத்தாலி - மற்றும் இந்தியா - வாடிகன் உறவை மேம்படுத்த இருவரும் ஆலோசனை மேற் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது