வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2022 (21:31 IST)

அர்ஜெண்டினாவில் எண்ணெய் ஆலையில் தீ விபத்து

அர்ஜெண்டினாவில் உள்ள நியூகன் என்ற மாகாணத்தில் இயங்கி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜெண்டினா நாட்டில் தெற்குப் பகுதியில் உள்ள நியூகன் என்ற மாகாணத்தில் உள்ள பிளாசா குயின் கள் பகுதியில் பிரபல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்று  இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இன்று திடீரென்று  தீ விபத்து ஏற்பட்டது.

ஊழியர்கள் தீயை அணைப்பதற்கும், அந்த தீ  எண்ணெய் ஆலை என்பதால் கொளுந்துவிட்டு எரிந்தது.

இதுககுறித்து, தீயணைப்புத் துறைக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்த பின் விரைந்து வந்த அவர்கள் தீயை அணைத்தனர். இவ்விபத்தில், 3 ஊழியர்ககள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.