1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2020 (11:32 IST)

இனிமேல் அவங்களோட ஒட்டும் இல்ல, உறவும் இல்ல! – கடையை சாத்திய வட கொரியா!

தென் கொரியாவுடனான அனைத்து வணிக மற்றும் ராணுவ தொடர்புகளையும் முடித்துக் கொள்வதாக வட கொரியா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறியும் வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவது உலக நாடுகளில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை பேசி தீர்க்கும் பொருட்டு ஹனோய் நகரின் நடத்தப்பட்ட உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் கொரிய அதிபர் கிம் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது, அதை தொடர்ந்து தென்கொரியாவுடனான தொடர்பை துண்டித்த வடகொரியா அணு ஆயுத பேச்சு வார்த்தைகளையும் நிறுத்திவிட்டது.

இந்நிலையில் வடக்கு மற்று தெற்கின் அதிகாரிகளுக்கு இடையேயான தொடர்புகள், எல்லைகளுக்கு இடையேயான வர்த்தக தொடர்புகள், மற்றும் தகவல் தொடர்புகளும் துண்டிக்கப்படுவதாக வட கொரியா அறிவித்துள்ளது. மேலும் கிழக்கு மற்றும் தெற்கு கடல் தொடர்புகள், கொரியா இடையேயான சோதனை தொடர்பு பாதை, ஆகியவற்றையும் துண்டிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.