வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 28 பிப்ரவரி 2019 (07:20 IST)

மலாலா சமாதான கருத்துக்கு இந்திய நெட்டிசன்கள் பதிலடி!

இந்திய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் ஒருவரை ஒருவர் கைகுலுக்கி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவ்வாறு பேசினால் இருநாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தணியும் என்று தான் நம்புவதாகவும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா கோரிக்கை வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
இந்திய பாகிஸ்தான் போர் ஏற்பட்டால் இருநாட்டு அப்பாவி மக்கள் பெரும் துன்பத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும், போரை தொடங்குவது எளிது, ஆனால் முடிப்பது மிகவும் கடினம் என்றும் இன்னொரு யுத்தம் இந்தியா-பகிஸ்தான் நாடுகளால் ஏற்பட வேண்டாம் என்றும் மலாலா இரு நாட்டு தலைவர்களை கேட்டுக்கொண்டுள்ளார்
 
இந்த நிலையில் மலாலாவின் இந்த கருத்துக்கு இந்திய நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். புல்வாமாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாத மலாமா, இந்திய வீர்ர்கள் 40 பேர் கொல்லப்பட்டபோது ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத மலாமா, இந்தியா தாக்குதல் நடத்தும்போது மட்டும் சமாதானம் பேச சொல்வது ஏன்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்