தொடர்புடைய செய்திகள்
- என் மீம்களை பார்த்து சிரித்தேன்…. மாளவிகா மோகனன் பதில்!
- நேருக்கு நேர் மோதலைத் தவிர்த்த இளம் நடிகர்கள்… ஒருவேளை பழைய பாசமா இருக்குமோ!
- உலகம் முழுவதும் ஒலிக்கும் விவசாய ஆதரவு குரல்கள்! – க்ரேட்டா தன்பெர்கும் ஆதரவு!
- காபா டெஸ்ட் வெற்றியின் போது கண்ணீர் விட்டு அழுதேன்… முன்னாள் இந்திய வீரர் உருக்கம்!
- ஸ்டாலின் என்ன மகாத்மா காந்தியா? ஒபிஎஸ் கேள்வி!
இங்கிலாந்தில் மீண்டும் படுவீரியமான கொரோனா வைரஸ்! – விஞ்ஞானிகள் அதிர்ச்சி!
இங்கிலாந்தில் ஏற்கனவே வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மேலும் வீரியமான கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டில் உலகம் முழுவதும் பரவி பல கோடி பேரை பாதித்துள்ளது. இந்நிலையில் இதற்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணிகள் முன்னேற்றத்தை கண்டுள்ள நிலையில் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து, பிரேசில், ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் வெவ்வேறு வகையான புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில் அவை எந்தெந்த நாடுகளில் பரவியுள்ளன என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் முந்தைய வீரியமிக்க கொரோனாவை விட அதிக வீரியமுள்ள கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கொரோனா வைரஸ் வீரியமடைந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
