வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (08:11 IST)

82 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை: கொரோனாவால் உலக அளவில் பதட்டம்

82 ஆயிரத்தை நெருங்கிய பலி எண்ணிக்கை
சீனாவில் உள்ள வூகான் என்ற மாகாணத்தில் பயணத்தை ஆரம்பித்த கொரோனா வைரஸ் அந்நாடு முழுவதும் பரவியது மட்டுமின்றி கிட்டத்தட்ட 190 நாடுகளுக்கு தற்போது வைரஸ் பரவி மனித குலத்தையே அச்சுறுத்தி வருகிறது.
 
கொரோனாவின் வைரஸின் தாயகம் என்று கருதப்படும் சீனா கூட தற்போது இந்த நோயிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள நிலையில் அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகள் கொரோனாவுக்கு பயங்கரமாக பாதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி உலக அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து நெருங்கி உள்ளது என்றும் அதாவது 81,987 என்று தகவல்கள் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 7500 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பலியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒருபக்கம் 82 ஆயிரத்து நெருங்கி உள்ள நிலையில் இன்னொரு பக்கம் சுமார் 15 லட்சம் பேர் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் வைரசால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்காவில் ஆயிரக்கணக்கில் தினமும் பலியாகி வருவது அந்நாட்டையே சீர்குலைத்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் பிரிட்டனில் 55,242 பேர்கள் பாதிக்கப்பட்டும் 6159 பேர் பலியாகியும் உள்ளனர். அதேபோல் துருக்கியில் 34,109 பேர் பாதிக்கப்பட்டும். 725 பேர் பலியாகியும் உள்ளனர். சுவிஸ் நாட்டில் 22,253 பேர் பாதிக்கப்பட்டும். 821 பேர் பலியாகியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது