1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (16:53 IST)

தடுப்பூசி போடாதவர்களுக்கு இரவு நேர ஊரடங்கு! – லெபனான் அதிரடி உத்தரவு!

லெபனான் நாட்டில் கொரோனா பாதிப்புகள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் மீண்டும் சில நாடுகளில் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், ஒமிக்ரான் பாதிப்பும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் லெபனான் நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் லெபனானில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு மட்டும் இரவு நேர ஊரடங்கை அந்நாட்டு அரசு அமல்படுத்தியுள்ளது.

அதன்படி டிசம்பர் 17 முதல் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை தடுப்பூசி போடாதவர்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்தியவர்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.