1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. India China submit

இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை !

India
லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை நடைப்பெறுகிறது. 

 
இந்தியா – சீனா இடையே கல்வான் பள்ளத்தாக்கில் மோதல் எழுந்ததை தொடர்ந்து எல்லையில் போர் பதற்றம் நீடித்து வந்தது. மேலும் இரு நாட்டு படைகளும் எல்லையில் குவிக்கப்பட்டதால் மேலும் பதட்டம் எழுந்தது. இந்நிலையில் சமாதான பேச்சுவார்த்தையால் படைகள் திரும்ப பெறப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில், லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே இன்று 11வது சுற்று பேச்சுவார்த்தை நடைப்பெறுகிறது. கிழக்கு லடாக்கின் சுஷூல் பகுதியில் காலை 10:30 மணிக்கு இருநாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர இனி நுழைவுத் தேர்வு !