1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (15:30 IST)

எலி கடித்ததால் திரும்ப எலியை கடித்த கல்லூரி மாணவி.. மருத்துவமனையில் அனுமதி..!

கல்லூரி மாணவி ஒருவரை எலி கடித்த நிலையில் ஆத்திரத்தில் எலியை அந்த மாணவி திரும்ப கடித்ததால் தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வினோத சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. 
 
சீனாவை சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவரை எலி கடித்துவிட்டது. இதனை அடுத்து அந்த எலியை பழிவாங்க வேண்டும் என்பதற்காக விரட்டி விரட்டி அந்த எலியை பிடித்து அதனை திரும்ப தனது பற்களால் கடித்துள்ளார். இதனால் எலி உயிரிழந்தது. 
 
ஆனால் எலியை கடித்ததால் அவருக்கு திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்ட நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
 
சிகிச்சைக்கு பின்னர் அந்த மாணவி தற்போது நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இது அவரிடம் இது போல் இனிமேல் செய்ய வேண்டாம் என்றும் இவரைப்போல் வேறு யாரும் செய்ய வேண்டாம் என்றும் அவரது கல்லூரி தோழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
Edited by Mahendran