1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (17:17 IST)

கிறிஸ் கெயில் பிரதமர் மோடிக்கு நன்றி...என் தெரியுமா??

கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் ,ஜமைக்காவுக்கு கொரொனா தடுப்பூசிகள் வழங்கியுள்ள இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டபரவல் அதிகரித்துவருகிறது.

இதைத்தடுப்பதற்கான கோவேசின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. இது பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இம்மருந்துகள் ஜமைக்கா நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. எனவே இதற்கு மேற்கு இந்திய தீவுர கிரிக்கெட் வீரர் கிறிஸ்கெயில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.