1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
  4. china land space craft to moon

நிலவின் தென் துருவத்தில் சீனாவின் விண்கலம்.. பாறை மாதிரிகளை ஆய்வு செய்ய முடிவு..!

நிலவு
நிலவின் தென் துருவத்தில் சீனாவின் விண்கலம் தரை இறங்கியதை அடுத்து அங்குள்ள மண் மற்றும் பாறை மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய சீன விஞ்ஞானிகள் முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன

நிலவின் தென் துருவ பகுதியில் இந்தியா தனது சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பி சாதனை செய்த நிலையில் தற்போது சீனாவும் அதே நிலவின் தென் துருவ பகுதிக்கு விண்கலத்தை அனுப்பியுள்ளது.

தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்புவது சவாலான பணி என்ற நிலையில் இந்தியாவுக்கு பின் சீனாவும் இந்த சாதனையை செய்துள்ளது. இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கியுள்ள சீன விண்கலம் இரண்டு நாட்கள் ஆய்வில் ஈடுபட்டு அங்குள்ள பாறைகள் மற்றும் மணல் மாதிரிகளை சேகரிக்கும் என்றும் அதன் பிறகு வரும் ஜூன் 25ஆம் தேதி பூமிக்கு திரும்பி வரும் என்றும் கூறப்படுகிறது


Edited by Siva
 
 
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் திடீர் ரத்து! என்ன காரணம்?