1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 13 நவம்பர் 2019 (22:41 IST)

ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் சென்னை மெட்ரோ ரயில்கள்

சென்னை ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட மெட்ரோ ரயில்கள், ஆஸ்திரேலியா நாட்டில்  பயணிகள் சேவையை தொடங்கியுள்ளது என்ற பெருமைக்குரிய செய்தி அனைத்து ஆஸ்திரேலியா முன்னணி ஊடகங்களில் வெளிவந்துள்ளது. இது சென்னைக்கு கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது
 
சென்னையில் உள்ள ரயில்பெட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையான, ஐ.சி.எஃப்-ல் தயாரிக்கப்பட்ட 22 மெட்ரோ ரயில்கள் ஆஸ்திரேலியாவுக்கு சமீபத்தில் கப்பல்கள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.  இரண்டு அடுக்குகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில்களில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அடங்கியுள்ளதாகவும் பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
 
சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில்கள் முதல்முறையாக வெளிநாடுகளில் தனது சேவையைத் தொடங்கியுள்ள நிலையில் ரயிலின் அமைப்பு, வசதிகள் குறித்து அந்நாட்டு பயணிகள் திருப்தி அளித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே எதிர்காலத்தில் ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமின்றி இன்னும் பல்வேறு நாட்களில் இருந்து சென்னை ஐ.சி.எஃப்-க்கு மெட்ரோ ரயில்கள் தயாரிக்கும் ஆர்டர்கள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது