வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2019 (19:48 IST)

’காகிதக் கழிவுகளை ’சேகரித்த சிறுமிக்கு குவியும் பாராட்டுக்கள்!

துபாய் தேசத்தில் வசித்து வருபவர் 8 வயது சிறுமி அவர் சுற்றுச்சூழல் பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வகையில், 15ஆயிரம் கிலோ காகிதக் கழிவுகளைச் சேகரித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நியா டோனி என்ற பெயர் கொண்ட அந்தச் சிறுமி சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு  15,000 காகிதக் கழிவுகளைச் சேகரித்ததற்காகப் பாராட்டப்பட்டார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது :
 
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நான் என்னைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் காகிதக் கழிவுகளை சேகரித்து அதனை மறு சுழற்றி செய்ய தொழிற்சாலைக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
 
மேலும், மக்கள் வெளியே வீசும் காகிதத்துண்டுகள், நாளிதழ், புத்தகங்களை எல்லாம் சேகரித்து வருகிறேன். இவ்வாறு செய்வதன் மூலம் சுற்றுச்சூழலை மாசு இல்லாமல் உருவாக்க முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.