1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (22:04 IST)

ஒரு மணி நேரத்தில் 249 டீக்கள் தயாரித்து சாதனை !

south africa
தென்னாப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த இங்கார் வாலன்டின் என்ற பெண் 249 தேநீர் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

இந்தப் பரந்த உலகின் எதாவதிலும்  சாதிக்க வேண்டும் என்று நோக்கத்துடன் ஒரு துறையைத் தேர்தெடுத்து, அதற்காக முயற்சித்து தொடர்ந்து ஓடிக் கொண்டே இருப்பவர்களுக்கு வெற்றி கணிந்திடும்  நான் நிச்சயம் வரும்.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் வசிகும் இங்கார் வாலன்டின் என்ற பெண்,  சுமார் 1 மணி  நேரத்தில் 249 தேனீர்களை தயாரித்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே ஒரு மணி நேரத்தில் 150 கப் தேனீர் தயாரிக்க வேண்டுமென்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இப்பெண் அசுர வேகத்தில் 249 கப் தேனீர் தயாரித்துக் கொடுத்துள்ளார்.

இந்த தேனீரில் வெண்ணிலா, ஸ்டாபெரி ஆகிய பிளேவர்களில் ரூயிபோஸ் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. இப்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
Edited by Sinoj