1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 28 ஜனவரி 2024 (16:51 IST)

பிரேசிலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவு..!

earthquake
பிரேசிலின் மேற்கு பகுதியில், பெரு நாட்டின் எல்லைப் பகுதியில், சனிக்கிழமை இரவு 11:24 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது
 
இந்த நிலநடுக்கம், பிரேசிலின் முக்கிய பகுதிகளில் உணரப்பட்டதாகவும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்படுத்தப்பட்ட அதிர்வுகள், பெரு நாட்டின்  பல பகுதிகளிலும் உணரப்பட்டன.
 
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
பிரேசில் மற்றும் பெரு ஆகிய நாடுகள், நிலநடுக்கம் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை பேரழிவுகளுக்கு அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாகும். இந்த நாடுகள், இயற்கை பேரழிவுகளுக்கு எதிராக தங்கள் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
 
Edited by Siva