அரசு ஊழியர்களிக்கு பலனளிக்கும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று அரசு ஊழியர்களுக்கான பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் அறிவித்தார்.
அதன்படி, ஓய்வூதியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.4,000இல் இருந்து ரூ.6,000 ஆயிரமாக உயர்த்தப்படும்.
அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பை சரண் செய்து பலன் பெறும் நடைமுறை இந்த ஆண்டே அமல்படுத்தப்படுகிறது.