1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 18 மார்ச் 2020 (08:36 IST)

குணமடைந்த மக்களுக்கு மீண்டும் கொரோனா – சீனாவில் அதிர்ச்சி !

சீனாவில் கொரோனாவால் குணமடைந்தவர்களில் 14 சதவீத மக்களுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 8000 பேர் பலியாகியுள்ளனர். மேலு 2 லட்சம் பேர் வரை பாதிப்படைந்துள்ளனர். முதன் முதலாக இந்த வைரஸ் தொற்றுக் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் கடந்த சில வாரங்களாக நோய் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களில் சிலர் அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் சீனாவில் அவ்வாறு மீண்டவர்களில் 14 சதவீதம் பேருக்கும் மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ஜப்பானிலும் குணமடைந்த ஒருவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக மருத்துவர்கள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர்.