1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 19 ஜூன் 2020 (07:49 IST)

இதுக்கு சென்னை வராமலே இருந்திருக்கலாம்.... பாவமா புலம்பும் மணிமேகலை!

தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிக்காததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுததால் மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவின் கீழ் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக மணிமகேலை ஊரடங்கினாள் கிராமம் ஒன்றில் மாட்டிக்கொண்டு சமீபத்தில் தான் சென்னை திரும்பினார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில், "நாளையில இருந்து மறுபடியும் லாக்டவுன்.. கடைசி நேரத்தில போய் இந்த காய்கறிகளை வாங்கிட்டு வந்தேன். ஆனால், இதெல்லாம் யாரு சமைக்குறதுன்னு தான் தெரியல... சமையல்கார அக்காவுக்கு Zoom call பண்ணித்தான் சமைக்கணும். முடிச்சா இந்த முறை எதுவும் வெடிக்காம சமைச்சு வீடியோ போடுறேன். இப்படி நடக்கும்னு தெரிஞ்சிருந்தா சென்னைக்கு வரலாமலே இருந்திருக்கலாம்" என  புலம்பி போஸ்ட் போட்டுள்ளார். .