ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (16:48 IST)

விராட் கோலி, தமன்னா மீது காவல்துறையில் புகார்

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்துள்ள விராட் கோலி, நடிகை தமன்னா மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

லாட்டரிக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், சிலர் ஆன்லைனில் சூதாட்டம் என்று விளம்பரங்களின் மூலம் இளைஞர்களைக் குறிவைத்து வருகின்றனர். இதில் விளையாடும் பலர் தங்கள் பணத்தை இழக்கிறார்கள்,. சமீபத்தில் ஒரு கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.

பிரபல நடிகர் ஷாம் பணம் வைத்து வீட்டில் சூதாடியதன் பேரில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில்., ஆன்லைனில் சூதாட்ட விளம்பரப்படங்களில் நடித்த்துள்ள கோலி,தம்ன்னா மீது நவடிக்கை எடுக்க வேண்டுமென  காவல்துறை தலைமை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.