சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!
விக்ரம் நடிப்பில் இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் நேற்று ரிலீஸாக இருந்த நிலையில் படம் சம்மந்தமான ஒரு வழக்கால் ரிலீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த படத்தில் முதலீடு செய்திருந்த IVY என்ற நிறுவனத்துக்கு அவர் டிஜிட்டல் உரிமையைக் கொடுத்திருக்கிறார் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ்.
ஆனால் அந்நிறுவனம் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்வதற்குள்ளாகவே ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் அறிவித்துவிட்டதாகவும் அதனால் தங்களால் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்ய முடியவில்லை என்றும் அந்நிறுவனம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர, வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடையை நேற்று அறிவித்தது. இதையடுத்து நேற்று காலை காட்சி மற்றும் மதியக் காட்சி இந்த படம் ரிலீஸாகவில்லை.
இதையடுத்து படம் பெரும்பாலும் பாஸிட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வரும் நிலையில் படத்தைப் பார்த்துள்ள கார்த்திக் சுப்பராஜ் “திரையரங்கில் விக்ரம் சார் வெறித்தனம் காட்டியுள்ளார். குறிப்பாக அந்த ஒரு சம்பவம். திரைக்கதை சிறப்பாக எழுதப்பட்டு அட்டகாசமான ஆக்ஷன் த்ரில்லராக, நல்ல நடிப்புடன் படமாக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.