வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 22 மார்ச் 2021 (08:47 IST)

பொதுமக்களுக்கு இடையூறாக விஜய் சேதுபதி பட படப்பிடிப்பு… பத்திரிக்கையாளரை மிரட்டிய நபர்!

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடந்து வந்தது.

ஆனால் படக்குழுவினர் கொரோனா விதிமுறைகளை சரியாகக் கடைபிடிக்காமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது அங்கே வந்த மாநகராட்சி அதிகாரிகள் படப்பிடிப்புக்கு தடை விதிக்க இது சம்மந்தமாக வாக்குவாதம் நடந்துள்ளது.

இதையறிந்த செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர் ஒருவருக்கும் படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த நபர் பத்திரிக்கையாளரை மிரட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய் சேதுபதி பத்திரிக்கையாளரை சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். கடைசியில் மிரட்டல் விடுத்த நபரே மன்னிப்புக் கேட்டதை அடுத்து பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.