வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (18:13 IST)

சென்ஸாருக்கு செல்லும் வெங்கட்பிரபு திரைப்படம்!

இயக்குனர் வெங்கட் பிரபு அசோக் செல்வனை வைத்து மன்மத லீலை என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக மாநாடு உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பின் போது சிம்புவால் பல பிரச்சனைகள் ஏற்பட்டதால் அந்த இடைவெளியில் அசோக் செல்வனை வைத்து மன்மதலீலை என்ற படத்தை இயக்கினார் வெங்கட்பிரபு.

அந்த படம் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில் மாநாடு ரிலிஸுக்காகக் காத்திருக்கிறது. இந்நிலையில் அந்த படத்தை இப்போது சென்ஸாருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளாராம் தயாரிப்பாளர்.ஆனாலும் ரிலீஸ் இப்போதைக்கு இருக்காது என சொல்லப்படுகிறது.