1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (18:02 IST)

சிம்பு மீது வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நடிகர் சிம்பு வேல்ஸ் பட நிறுவனம் தொடந்த வழக்கில் ஒரு கோடி ரூபாய் உத்தரவாதத்தை சிம்பு செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேல்ஸ் பட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் கொரோனா குமார் என்ற படத்தில் நடிப்பதற்காக சிம்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு ரூபாய் 4.50 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டது. 
 
ஆனால் பல ஆண்டுகள் ஆகிய அந்த படத்தை முடிக்கவில்லை என வேல்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது வேல்ஸ் பட நிறுவனம் தொடந்த வழக்கில் சிம்பு ரூபாய் ஒரு கோடி உத்தரவாதத்தை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கோலிவுட் திரை உலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran