ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:39 IST)

ஒட்டுமொத்த இசை ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: தமிழக ஆளுநர்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல் நலக்குறைவால் இன்று பிற்பகல் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சில் இடியாய் விழுந்தது 
 
இந்த நிலையில் எஸ்பிபி மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே இரங்கல் தெரிவித்தனர் என்று செய்தியைப் பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் எஸ்பிபி மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த இசை ரசிகர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என்று பன்வாரிலால் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மென்மையான குரலும் இசையும் என்றும் எங்களுடன் வாழும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் தனது இரங்கல் செய்தியில் ’இந்திய இசை அதன் குரல்களில் ஒன்று இழந்து விட்டது’ என்று குறிப்பிட்டிருந்தார்