வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (15:35 IST)

’’யாருக்கும் இல்லாத சிறப்பு எஸ்.பி.பிக்கு மட்டுமே உண்டு ’’– வீடியோ வெளி்யிட்டு…ரஜினி உருக்கம்

இந்தியத் திரையுலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் தன் காந்தர்வக் குரலால் ஐம்பது வருட காலம் தனி சாம்ராஜ்யமே நடத்திவந்து,அனைத்து மக்களின் காதுகளையும் குளிர்வித்து, இதயத்தை இதயமாக்கிய எஸ்.பி.பி இன்று நண்பகலில் காலமானார்.

 
கடைசி நிமிடம் வரை போராடி மரணத்தை தழுவிட்டார் எஸ்பிபி. அவருடைய குரலுக்கு ரசிகராக இல்லாதவர் யாரும் இருக்க முடியாது. அவருக்கு உரிய மனித நேயர். அன்பான மனிதர். எத்தனையோ  பாடகர்களை அறிமுகம் செய்துள்ளது. யாருக்கும் இல்லாத சிறப்பு எச்பிக்கு உள்ளது. அத்தனை மொழிகளிலும் பாடியுள்ளார். எனது குரலாக பல ஆண்டுகள் ஒலித்தீர்கள்.  உங்கள் குரலுடன் நினைவுகளும் எப்போதும் வாழும். இன்னும் நூறு ஆண்ட்கள் ஆனாலும் அவரது குரல் இசயாய் ஒலிக்கும். அவரது குடும்பத்திற்கு எனந்து ஆழ்ந்த இரங்கல்….அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்துள்ளார்.