1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (19:13 IST)

மணிரத்னம் படத்திற்கு இசையமைக்க காரணம் இதுதான் - இளையராஜா

ஒரு புத்தகத்திற்கு எழுதிய அணிந்துரையில் இளையராஜா பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்காருடன் ஒப்பிட்டு எழுதியது  பேசு பொருளானது.

இந்நிலையில், திரைப்பட இயக்குநர் சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அக்காகுருவி. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படம் வரும் மே 6 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதில் கலந்துகொண்டு பேசிய இளையராஜா, நான் இசையமைக்கும் படங்களை பார்ப்பதுடன் சரி,  மற்ற சினிமாக்களை பார்க்க எனக்கு  நேரமில்லை ஆனால், சாதாரண  நாட்களில் உலக சினிமாக்களை பார்க்கிறேன். உலக சினிமாக்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். சில்ட் ரன் ஆப் ஹெவன் என்ற சினிமாவை பார்த்தபோது எனக்கு ஆச்சயர்மாக இருந்தது.  தமிழ் நாட்டில் இப்படி படங்கள் ஏன்வேடுப்பதில்லை என வருத்தமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார். கலைஞனுக்கு கற்பனை தோன்றினால்தான் உயர்ந்த ஒன்றை உருவாக்கமுடியும்., நம் இயக்கு நர்களிடம் அது இல்லை….  இயக்கு நர் சாமி அதே படத்தை நம் ஊரில் எடுத்தால் எப்படி இருக்கும் என யோசித்து அந்தக் கதையை மாற்றி எடுத்துள்ளார். அதனால் இப்படத்திற்கு இசையமைத்துள்ளேன்.

மனிரத்னத்தின் முதல் படத்திற்கு இசையமைக்க காரணமும் அதுதான்.  நல்ல படைப்புகள் வரவேண்டும்,. அதை பொதுமக்கள் ஊக்குவிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.