வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2020 (21:33 IST)

உங்களோடு தேசம் துணை நிற்கிறது!" - ஜி.வி .பிரகாஷ்குமார் , கமல் டுவீட்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தின் வணிகர்களான ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்கு நாடெங்கிலும் இருந்து கண்டனங்கள் குவிந்ததை அடுத்து, மதுரை உயர் நீதிமன்றக் கிளை தாமாகவே இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பின்னர், தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், நேற்று காவல்துறையினர் பதிந்த எஃப்.ஐ.ஆர் பதிவிற்கும் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் கடைக்கு முன்னிருந்த சிசிடிவியின் பதிவான காட்சிகளுக்கு முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக மீடியாக்கள் பகிரங்கமாக செய்திகள் வெளியிட்டனர்.

இந்நிலையில், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை விடிய விடிய போலீசார் லத்தியால் அடித்தனர் என நேரடி சாட்சி வாக்குமூலம் அளித்துள்ளார்  மாஜிஸ்திரேட் பாரதிதாசன்.

இதுகுறித்து மாஜிஸ்திரேட் பாரதிதாசன் கூறியுள்ளதாவது :

நான்  கட்டாயப்படுத்திய பிறகே லத்திகளை காவல்துறையினர் காவல் நிலைய போலீஸார் ஒப்படைத்தனர் என தெரிவித்துள்ளார்.

மேலும்,  சாத்தான் குளம் காவல்நிலைய டேபிள் மற்றும் லத்தியில் ரத்தக்கறை படிந்துள்ளதாகவும் காவலர் ரேவதி கூறினார். நாம் கட்டாயப்படுத்தியப் பிறகுதான் போலீஸார் லத்திகளை ஒப்படைத்தனர்.

லத்தியை தரமறுத்த மகராஜனை கையை வைத்து தள்ளி அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

தலைமைப் பெண் காவலரின் இந்த தைரியமாக வாக்குமூலமும், மாஜிஸ்திரேட் பாரதிதாசனின் அறிக்கையும் உண்மையான நீதியை ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணத்திற்குப் பெற்றுக்கொடுக்கும் என்று பலரும் நம்புகின்றனர்.

இதுகுறித்து, நடிகர்கள் கமல்ஹாசன், ஜி.வி.பிரகாஷ்குமார் கூறியுள்ளதாவது:

"நீதி வென்றிட யாருக்கும் அஞ்சிடாத நெஞ்ச துணிவோடு உண்மையை உறுதியாக எடுத்து சொன்ன தலைமை காவலர் ரேவதி அவர்களுக்கு தலைவணங்குகிறேன்... உங்களோடு தேசம் துணை நிற்கிறது!" @gvprakash #Revathi | #JusticeforJayarajAndFenix     ||    | என்று ஜி.வி பிரகாஷ்குமார் தனது டுவிட்ட பக்கத்தில் பதிவுட்டுள்ளார்.

''சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் நீதியை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கும் மேஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதி மன்றத்திற்கும், மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்'' என கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.