ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 19 நவம்பர் 2021 (17:22 IST)

''எதற்கும் துணிந்தவன் ''படத்தில் பாடல் எழுதிய பிரபல நடிகர்!

சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பாடல் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை சமீபத்தில் வெளியாகி வைரலாகியது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்து விட்டதாக சமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்தார்.

இந்நிலையில்  வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவடி 4 ஆம் தேதி  எதற்கும் துணிந்தவன் படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என சன்பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேல, டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தில் விக்னேஷ் சிவன், யுகபாரதியுடன் இணைந்து, நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. 2