வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (13:56 IST)

தங்கலான் திரையிடப்பட்ட தியேட்டரில் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்… ஷோ கேன்சல் !

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘தங்கலான்’ படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில் இன்று தமிழ் நாட்டில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் ஆதரவு கிடைத்துள்ளது. தற்போது காலை சிறப்புக் காட்சி திரையிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க, ஜி வி பிரகாஷ் இசையில் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்கவயலில் வேலை செய்த தமிழர்களைப் பற்றிய மேஜிக்கல் ரியலிச கதையாக இந்த படத்தை ரஞ்சித் உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் தங்கலான் திரையிடப்பட்ட தியேட்டர் ஒன்றில் ஆடியோ சரியாகக் கேட்காததால் ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட திரையரங்க நிர்வாகம் ஷோவைக் கேன்சல் செய்து அனைவருக்கும் டிக்கெட்டுக்கான காசை திரும்பக் கொடுத்துள்ளது.